நடராஜர் – சிவகாமி திருக்கோயில் பூமி பூஜை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்

கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பச்சமலை சுப்ரமணியன் திருக்கோயிலில் நடராஜர் சுவாமி – சிவகாமி அம்பாளுக்கு தனிக்கோயில் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் பச்சமலை பாலமுருகன் கோயிலில், புதிதாக கோயில் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நடராஜர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருக்கோயில் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

Exit mobile version