விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் நாசாவின் முயற்சி தோல்வி

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியது. நிலவில் தரையிறங்கும் போது 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில் விகரம் லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும் முயற்சிக்கு பின் ஆர்பிட்டர் மூலம், விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியபட்டது. அதனை தொடர்பு கொள்ள இஸ்ரோ முயற்சி மேற்கொண்ட நிலையில் நாசாவின் உதவியும் நாடப்பட்டது. இந்நிலையில், நாசாவாலும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் நாசாவின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியாவின் முயற்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version