தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நிரவ் மோடி இந்தியா வர மறுப்பு

தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் தான், தான் நாடு திரும்பவில்லை என வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.அவர் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான வழக்கில் நிரவ் மோடியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆஜரானார். அப்போது, நிரவ் மோடி, இந்தியா வர விரும்புவதாகவும், ஆனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நிரவ் மோடி வர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு நிரவ் மோடி கடிதம் எழுதியிருப்பதாகவும் வழக்கறிஞர் விஜய் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version