மக்களிடம் கருத்துக்கேட்கும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி

ஆகஸ்ட் 15ம் தேதி உரையில், என்னென்ன அம்சங்கள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. அன்று செங்கோட்டையில் தான் பேசப்போகும் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார். செங்கோட்டையில் இருந்து உங்கள் கருத்துகளை 130 கோடி இந்தியர்கள் கேட்கட்டும் என்றும், இதற்காக நமோ செயலியில் புதிதாக ஒரு தளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள பிரதமர் அதற்கான இணைப்பையும் சேர்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version