பாரீஸில் நடந்துவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜப்பானின் நவாமி ஒசாகா விலகல்

பாரீஸில் நடந்துவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜப்பானின் நவாமி ஒசாகா விலகினார்.

முதல் சுற்று போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை கிளம்பிய நிலையில், பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

2018ம் ஆண்டு யு.எஸ். ஓபன் தொடரில் இருந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version