ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும் இடத்தை ஆய்வு செய்த நாமக்கல் சார் ஆட்சியர்

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்ததிலுள்ள பாதுகாப்பு வசதிகளை மாவட்டசார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 350 ஜல்லிக்கட்டு காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் வாடிவாசல்,உயரமான மேடை, தடுப்பு அமைப்பு, காளைகள் வெளியேறும் இடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சார் ஆட்சியர் கிராந்தி குமார் பதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்த , விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

Exit mobile version