விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் 750 காளைகளும், 316 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போட்டியின் தொடக்கத்தில் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த காளைகள், வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.

Exit mobile version