ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுத் தொடர்பான தமிழ்நாடு அரசின் அவரசச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுத் தொடர்பான தமிழக அரசின் ஆவணங்கள் சரியாக உள்ளன என்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனைக் கொண்டாடும் வகையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்.

Exit mobile version