காணாமல் போன நாமக்கல் விவசாயி கொலை செய்யப்பட்டாரா? காவல்துறையினர் தீவிர விசாரணை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, காணாமல் போன விவசாயி, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாமக்கல்  ராசிபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த வரதராஜ், இன்று காலை முதல் காணவில்லை. அவரது வீட்டில் ரத்தம் சிந்திக் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வரதராஜ் கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version