ரூ.486 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்ட துவக்க நிகழ்ச்சி – முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி இன்று தொடங்கி வைக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஒன்றிய கூட்டுக்குடிநீர் திட்டம் 399 கோடி ரூபாய் மதிப்பிலும், திருச்செங்கோடு நகராட்சிக்கான தனி புதிய குடிநீர் 87 கோடி ரூபாய்க்கான திட்ட பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் சென்று அடிக்கல் நாட்டி வைத்து திறந்து வைக்கிறார்.

இந்த திட்டங்களால், 669 கிராமங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version