நக்கீரன் கோபால் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து, பொது வெளியில் அவதூறான கருத்துக்களை பரப்பி வரும் நக்கீரன் கோபால், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் கொடுமை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நக்கீரன் கோபால், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவதூறான கருத்துக்களைப் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் மீது புகார் கூறப்பட்டது. புகாரின் அடிப்படையில் 15ஆம் தேதி, நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராகுமாறு, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில், தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்த நக்கீரன் கோபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

Exit mobile version