இயற்கை முறையில் தயாரிக்கப்படும் N – 95 முகக்கவசங்கள்!!

உடல் நலத்துக்கும், மன அமைதிக்கும் ஏற்றார்போல் வெட்டிவேரை பயன்படுத்தி முக கவசம் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். வெட்டிவேருடன் Organic வண்ணங்களுடன் தயாராகும் முகக்கவசம் பற்றிய செய்தி தொகுப்பை காணலாம்…

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் சூழலில் முக கவசம் தான் உயிர்காக்கும் கவசம் என்பதை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர தொடங்கிவிட்டனர். இத்தகைய முகக்கவசங்களை, இயற்கை பொருட்களை கொண்டு தயாரித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சண்முகம். பல ஆண்டுகளாக கார்மென்ட்ஸ் தொழில் செய்து வரும் இவர், தற்போது முக கவசம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கரோனா வைரஸ் பரவலை, 95 சதவீதம், முழுமையாக கட்டுப்படுத்தும் எனத் தெரிவிக்கும் 5 அடுக்குகள் கொண்ட N95 முக கவசத்தை, இயற்கை பொருட்களை கொண்டு தயாரித்துள்ளார்.

சென்னையில் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் இன்றைய தேவைக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிங்களுக்கு அனுப்பி வருவதாக கூறும் சண்முகம், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். 

சுவாசப் பாதையில் பயன்படுத்தும் பொருள் என்பதால் மிகவும் கவனத்துடன் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும், இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதில்லை எனவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version