ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த மர்ம ஆசாமி: பொறி வைத்து பிடித்த காவல்துறை

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த மர்ம ஆசாமியை காவல்துறையினர் பொறி வைத்து பிடித்தனர்…

கொடுங்கையூர் காமராஜர் சாலை காந்தி நகர் பகுதிகளில் நள்ளிரவில் ஒருவர் ஆடையின்றி திரிவதாகவும், கையில் கத்தியுடன் சுற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு இரவில் அடிக்கடி தொலைபேசி அழைப்புக்களும் வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவலர்கள் சென்றால் அங்கு யாரும் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் நிர்வாண ஆசாமியால் கொடுங்கையூர் பகுதி மக்கள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் செல்வதாகவும்.நிர்வாண ஆசாமி பீதியால் பெண்கள் இரவில் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். சிறுமிகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் விரைவாக செயல்பட்ட காவல்துறை அந்த ஆசாமியை பொறிவைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அதில் நிர்வாண ஆசாமி ஒருவர் நடந்து செல்வதும், அங்கிருக்கும் பொதுமக்கள் அவனை துரத்துவது போலவும் அதில் பதிவாகியிருந்தது மேலும் அவன் யாரையோ பார்த்து ஓடுவது போலவும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த மர்ம ஆசாமியை பொறி வைத்து பிடிக்க வேண்டும் என்று காத்திருந்த காவல்துறையிடம் சிக்கினான் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள தனது கள்ளகாதலி வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் நள்ளிரவு சென்று வருவதாகவும், அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டதும் துணி கூட போடாமல் ஓடி விட்டதாகவும்,பின்னால் காவல்துறையினரும் பொதுமக்களும் விரட்டியதால் பயத்தில் வெகு தூரம் ஓடியதாகவும் தனது உடைகளையும், செல்போனையும் எடுக்க மீண்டும் அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் கூறியுள்ளான். இதனால் அவனை எச்சரித்த காவல்துறையினர் மேலும் விசாரணை கொண்டு வருகின்றனர்.

Exit mobile version