வீடு புகுந்து குடும்பத்தைச் சரமாரியாக வெட்டிய மர்மக் கும்பல்

நாமக்கல்லில் கணவன், மனைவி மர்மமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மேட்டுத்தெருவில் விமல்ராஜ் – அனிதா தம்பதியினர் தங்களது 5 மாதக் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உதவியாக அனிதாவின் தந்தை கருப்பசாமியும் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்துடன் இருந்த விமல்ராஜ், அனிதா, கருப்பசாமி ஆகியோரை மர்மக் கும்பல் ஒன்று வீடு புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இந்தத் தாக்குதலில் விமல்ராஜ், அனிதா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, படுகாயங்களுடன் கிடந்த கருப்பசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காவல்துறையினர், கொலையில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர்.

Exit mobile version