ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மர்ம கும்பல்

சென்னையில் பெட்ரோல் பங்கில் கத்தியிடன் வந்த மர்ம கும்பல் ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூர் அடுத்துள்ள ஆலப்பாக்கம் பெட்ரோல் பங்க்கில், இரவு 10 மணியளவில் நெற்குன்றம் பகுதியை சார்ந்த மணி என்பவர் ஆட்டோவில் பெட்ரொல் நிரப்ப வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த இளவரசன், பெட்ரொல் நிரப்பாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணி, ஊழியரை தாக்கிவிட்டு தப்பியோடினார்.

பின்னர் சிறிது மணி நேரம் கழித்து மீண்டும் கும்பலுடன் வந்த மணி பட்டாக்கத்தியை காட்டி ஊழியர்களை தாக்கி, அலுவலக கண்ணாடிகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பெட்ரொல் பங்கின் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி ,தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version