சென்னையில் சரக்கு வாகனத்திலிருந்து பேட்டரியைத் திருடிய மர்ம நபர்

சென்னையில், சரக்கு வாகனத்திலிருந்து பேட்டரியைத் திருடிய நபரை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர். சென்னை கொடுங்கையூரை அடுத்த சேலைவயல் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன உரிமையாளர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் அவரது வாகனத்தில் இருந்த பேட்டரியை காணவில்லை. உடனே தனது வீட்டில் இருந்த கண்கானிப்பு கேமரா காட்சிகளை அவர் ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிப்பது போல சென்று அவரது வாகனத்தில் இருந்த பேட்டரியை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கொடுங்கையூர் காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version