குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version