சேலம் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்கள்

சேலம் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலீப், மற்றும் அவரது மாமன் மகன் சரன்குமார் இருவரையும் வழிமறித்த 3 பேர் ஆயுதத்தை கொண்டு தாக்கிவிட்டு தப்பி ஓடிவினர். இதில் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் சென்ற சரன்குமார் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வின்போதும் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். கொலை செய்த மர்ம நமர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திலீப்பின் உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் இருவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version