பழனி அருகே மருத்துவ கழிவுகளை தீ வைத்து கொளுத்தும் மர்ம நபர்கள்

பழனி அருகே மருத்துவக் கழிவுகளை கொட்டி தீவைத்த மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கொழுமம்கொண்டான் பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக லாரிகளில் மர்மமான முறையில் கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களில் கொட்டி தீ வைத்து கொளுத்தப்படுவதாக புகார் எழுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி தூர்நாற்றத்துடன் புகைமண்டலமாக காட்சியளிப்பதாக தெரிகிறது. இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version