ATM இயந்திரம் என நினைத்து, பாஸ்புக் எண்ட்ரி செய்யும் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள்

சென்னையில் ஏடிஎம் இயந்திரம் என நினைத்து, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு புத்தகம் எண்ட்ரி செய்யும் இயந்திரத்தை உடைத்த கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள SBI வங்கியின் ஏடிம் மையம் ஒன்றில், இயந்திரத்தை இளைஞர் ஒருவர் உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். மும்பையில் உள்ள SBI வங்கியின் தலைமை அலுவலகத்தில் அபாய ஒலி ஒலித்ததால், அவர்கள் காவல்துறை கட்டுப்பாடு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஆய்வு மேற்கொண்ட போது, ஏடிஎம் மையத்தில் இருந்த பாஸ்புக் எண்ட்ரி இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வங்கியின் தலைமையகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கொள்ளையனின் புகைப்படத்தைக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Exit mobile version