சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடைத்த மர்ம நபர்கள்!

பெரம்பலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல்,  சீல் வைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 20-க்கும்  அதிகமான மதுபான பெட்டிகளை  திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version