தெலுங்கானாவில் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்!!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள டெக்மல் நகரில் மாவட்ட கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் வங்கியின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த மர்மநபர்கள், வங்கியின் லாக்கரை திறக்க முயன்றனர். அப்போது, அதிலிருந்த சென்சார் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறை வாகனத்தின் சத்தம் கேட்ட மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய அதிகாரிகள் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version