திருவள்ளுவர் சிலையின் மீது சாணத்தை தெளித்த மர்ம நபர்கள்

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணத்தை தெளித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

பிள்ளையார்பட்டியில் 2005ஆம் ஆண்டு அப்பகுதி மக்களால் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 18 ஆண்டு காலமாக அந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை திருவள்ளுவர் சிலையின் முகத்தில் மாட்டு சாணத்தை தெளித்தும், கருப்புத் துணியால் சிலையில் கண்கள் கட்டப்பட்டும் இருந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version