மைசூர் அரண்மனையில் தசரா விழா கொண்டாட்டம்

மைசூரில் தசரா விழாவையொட்டி சாமி மரத்துக்கு மைசூர் மன்னர் பூஜை செய்து வழிபட்டார். விழாவையொட்டி அரண்மனையில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். விஜயதசமி நாளையொட்டி இன்று மைசூர் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் யதுவீர கிருஷ்ண தத்த சாமராஜ உடையார், சாமி மரத்துக்குப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரண்மனை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version