முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா கொண்டாட்டம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழாவும் 57ஆவது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைக் கௌரவப் படுத்துவதற்காக அதிமுக சார்பில் 13 புள்ளி 7 கிலோ கொண்ட தங்கக் கவசம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அணிவிக்கப்பட்டது. எனவே கவசத்திற்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குருபூஜை விழாவினை ஒட்டி தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Exit mobile version