ஆரணியில் முத்துமாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வடம் பிடித்து தேரிழுத்து தொடங்கி வைத்தார். இந்த கோவிலின் பழைய தேரைப் புதுப்பிக்க அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து அரசு சார்பில் 14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தேரைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேரோட்டத்தில் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

Exit mobile version