முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொண்டாட்டம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மூன்றாம் நாளில் காளை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் திருவிழாவில் காலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று வழிபட்டனர். இரவு பதினொன்றரை மணியளவில் முத்தாரம்மன் பார்வதி கோலத்தில் காளை வாகனத்தில் எழுந்தருளினார். தீபாராதனையைத் தொடர்ந்து மேளதாளம் முழங்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Exit mobile version