இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்திய ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை கண்டித்து இலங்கையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈஸ்டர் தினத்தில் இலங்கை தேவாயலங்களில் கூடியிருந்த கிறிஸ்துவர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்தியதில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினை கண்டித்து இலங்கை நீர்கொழும்பில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரிய மசூதியிலிருந்து ஜும்மா மஸ்தித் வீதி வழியாக யூஸுபியா மசூதி வரை பேரணியாக சென்ற இஸ்லாமியர்கள், அங்கு இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Exit mobile version