ஒரே நாடு ஒரே பிரதமர் என்பது பாஜகவின் நிலைப்பாடு : முரளிதர ராவ்

காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் வாரிசு அரசியலை முன்னெடுக்கின்றன என்றும் தமிழகத்தில் அனைத்து பிரச்சனைக்கும் திமுக-காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறினார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒரே நாடு ஒரே பிரதமர் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு என்றும், ஆனால், தேவையற்ற விஷயங்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். இதனால் முக்கிய பிரச்சனைகள் கூட கவனத்தில் எடுத்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று முரளிதர்ராவ் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர், பல நல்ல திட்டங்களை பாஜக கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

Exit mobile version