மூணாறு, லாக்காடு கேப் சாலையில் தொடரும் மலைச்சரிவு

மூணாறு அருகே லாக்காடு கேப் சாலையில் மீண்டும் மலைச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

மூணாறில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் மலைச்சரிவு ஏற்பட்டது. கடந்த 8ந் தேதி, மலைச் சரிவில் சிக்கி மாயமான தமிழரசன் என்பவரை தேடும் பணியில் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், மீண்டும் இதே பகுதியில் மலைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

மலைச் சரிவு ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இச்சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், தொடர் மழை காரணமாக மலைச் சரிவு அடிக்கடி ஏற்படுவதாகவும், இரவு நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மாயமான தமிழரசன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

 

Exit mobile version