மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

மாநகர போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல், நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாளை பேரணி நடத்தும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுப்பும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மாநகர போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல், நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version