வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தனியார் திரையரங்கிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

சேலத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்த தனியார் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வளாகத்தில் 6 திரையரங்கு இயங்கி வருகின்றன. கடந்த 2 வருடங்களாக இந்த நிறுவனம் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வரியை செலுத்த உரிய காலக்கெடு விதித்தனர். இந்நிலையில் காலக்கெடு முடிந்த பிறகும், வரியை செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் தியேட்டருக்கு சீல் வைத்தனர். ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக 25 தியேட்டர்கள் இயங்கி வருவதாகவும், சுமார் 80 லட்ச ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version