தற்காலிக கடைகளை ஆக்கிரமிப்பு என கூறி அகற்றிய நகராட்சி அதிகாரிகள் !

சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருதால் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகள் தற்காலிக பேருந்து நிலையத்தின் ஓரம் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளின் கடையை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்காலிக கடைகளை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version