புதுச்சேரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நகராட்சி தலைமை அலுவலகம் முன்பு நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழங்க வேண்டிய  ஊதியத்தை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், ஊதியம் வழங்காத ஆணையரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இது தொடர்பாக அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version