மும்பை பங்கு சந்தைகள் ஏற்றத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை பங்கு சந்தை இன்று 345 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது. பெரும்பாலான பங்குகள் ஏறுமுகமாக உள்ளதால் பங்கு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலக பங்கு சந்தைகள் ஏற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இறக்கம் ஆகிய காரணங்களால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இன்று பங்கு சந்தை 345 புள்ளிகள் உயர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மும்பை பங்கு சந்தையில் மருந்து நிறுவனங்கள், பேங்க், டாடா மோட்டார் ஆகியவை ஏற்றம் கண்டன. இதில் மும்பை பங்கு சந்தை 345 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 153 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 885 புள்ளிகளாக உள்ளது.

Exit mobile version