மும்பை பங்குச்சந்தை மீண்டும் வீழ்ச்சி

பங்குச்சந்தை இன்று தொடக்கத்திலேயே சரிவை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதலே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் ஆயிரத்து 708.24 புள்ளிகள் சரிந்து, 33 ஆயிரத்து 989.16 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குசந்தை குறியீட்டெண் 519 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 9 ஆயிரத்து 939.40 புள்ளிகளாக வணிகமானது.

Exit mobile version