மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்றைய தினம் சரிவுடன் நிறைவடைந்தது

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்றைய தினம் சரிவுடன் நிறைவடைந்தன. திங்கட்கிழமை காலை சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை, மாலையில் 793 புள்ளிகள் சரிவடைந்து 38 ஆயிரத்து 720 புள்ளி 57 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 247 புள்ளிகள் சரிவடைந்து, 11 ஆயிரத்து 564 புள்ளிகளாக நிறைவடைந்தது.

அதிகபட்சமாக பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதம் வரை குறைந்தன. பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, ஹிரோ மோட்டோ கார்ப், மாருதி, எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.

Exit mobile version