முல்லைப்பெரியாறு அணையில், ஒரே நாளில் 2 மடங்காக நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் 2 மடங்காக அதிகரித்து ஆயிரத்து 402 கன அடியாக உயர்ந்துள்ளது.

முல்லை பெரியாறு அணைக்கு நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 735 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து 2 மடங்காக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஆயிரத்து 402 கன அடியாக உள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version