எல்லோரைப்போல் எனக்கும் கோபம் வரும்: தோனி

எல்லோரைப்போல் தனக்கும் கோபம் வரும் எனவும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை எனவும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மகேந்திர சிங் தோனியிடம், எத்தகைய சூழலிலும் மிகவும் பொறுமையாக எப்படி இருக்க முடிகிறது என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார். அதற்குப் பதிலளித்த தோனி, எல்லோரைப்போலத் தனக்கும் கோபம் வரும் எனவும், பிறர் அதை வெளிக்காட்டிக் கொள்வதாகவும், தான் வெளியே காட்டாமல் பொறுமை காப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version