மீண்டும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தோனி

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு, இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணிக்கான கனவு அணியை அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை வைத்து இந்த அட்டவணையை உருவாக்கி உள்ளது. இதில், இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தொடக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்க உள்ளார். விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக நியமித்துள்ளது.

இதேபோல், தற்போது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை, டெஸ்ட் கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

ஒருநாள் போட்டிக்கான கனவு அணி வீரர்கள்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஹசிம் அம்லா, ஏபி டி வில்லியர்ஸ், ஷகிப்-அல்-ஹசன், ஜோஸ் பட்லர், ஸ்டார்க், டிரண்ட் போல்ட்,
மலிங்கா, ரஷித் கான்.

Exit mobile version