News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

Web Team by Web Team
September 21, 2020
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு
Share on FacebookShare on Twitter

வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

வேளாண் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும், துணைத்தலைவர் ஹரிவன்ஸ் சிங் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியாது என்றும், இதுபோன்ற தீர்மானம், நாடாளுமன்ற விதிகளின் கீழ் வராது என்றும் தெரிவித்தார்.

மேலும், வேளாண் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ பிரையன், தோலா சென், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சதவ், சையது நாசீர் ஹூசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராகேஷ், இளமரம் கரீம் ஆகிய 8 பேர் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள், அவையில் இருந்து வெளியேறாமல் முழக்கங்களை எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடிய போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.-க்கள் அவையை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். வேளாண் திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் அவையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று, மாநிலங்களவை துணைத் தலைவர் புவனேஸ்வர் கலிதா அறிவுறுத்தினார். எம்.பிக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, அவையை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் புவனேஸ்வர் கலிதா அறிவித்தார்.

Tags: டெரிக் ஓ பிரையன்நாடாளுமன்றம்மக்களவைமாநிலங்களவைவெங்கையா நாயுடுவேளாண் திருத்த மசோதா
Previous Post

குறைந்தபட்ச ஆதாரவிலை முன்பைப் போலவே தொடரும் – பிரதமர் மோடி உறுதி

Next Post

3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

Related Posts

மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!
இந்தியா

மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!

September 26, 2020
8 எம்.பி.க்கள் இடைநீக்கம் – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்தியா

8 எம்.பி.க்கள் இடைநீக்கம் – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

September 22, 2020
உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு
TopNews

உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு

September 22, 2020
எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!
TopNews

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

September 17, 2020
மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை – மத்திய அரசு
TopNews

மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை – மத்திய அரசு

September 16, 2020
மக்களவையில் அவை விதிகளை மீறிய 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
TopNews

மக்களவையில் அவை விதிகளை மீறிய 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

March 6, 2020
Next Post
3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் - முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version