எம்.பி. ரவீந்திரநாத் குமார் பயணம் செய்த கார் மீது தாக்குதல் : அதிமுகவினர் போராட்டம்

தேனி நாடாளுமன்ற எம்.பி. ரவீந்திரநாத் குமார் பயணம் செய்த கார் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், சென்னையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.பி ரவீந்திரநாத் குமார் பயணம் செய்த காரை சிலர் வழிமறித்தனர். பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, எம்.பி ரவீந்திரநாத் குமார் கார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், சென்னையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

Exit mobile version