மலைப்பூண்டு விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

கொடைக்கானல் பகுதியில் மலை பூண்டுகளின் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மேல்மலை மற்றும் வில்பட்டி கிராமங்களில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் மலைபூண்டுகள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மலைப்பூண்டுகளை விளைச்சல் செய்து அறுவடை செய்வதற்கு சுமார் மூன்றரை மாதம் முதல் நான்கரை மாதங்கள் தேவைப்படுகின்றன. போதிய மழையின்மை, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் மலைபூண்டு விவசாயம், நாளடைவில் பாதிப்பை சந்திக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Exit mobile version