நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் பகல்நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் காட்டெருமையால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஒருவார காலமாக சோதனைச்சாவடி அருகே காட்டெருமை சுற்றித்திரிகிறது. அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதால் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version