ஆந்திராவில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஆந்திராவில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய், இரண்டே கால் கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ். அண்மையில், இவரது வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகளில், ஆந்திர லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், 3 கிலோ தங்க நகைகள், 10 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, வெங்கட்ராவ் கைது செய்யப்பட்டார்.

வெங்கட்ராவின் கார் டிரைவர் மோகன் ராவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், நகைகள் மற்றும் சொத்து பத்திரங்களை கைப்பற்றினர்.

Exit mobile version