அன்பின் ஆதி ஊற்று அவள் : தன்னை கரைத்து பிள்ளைகளை கரைசேர்க்கும் ஒப்பற்ற ஜீவன் தாய்.

அன்பின் ஆதி ஊற்று அவள்; அகிலத்தின் எட்டாம் அதிசயம். தன்னை கரைத்து பிள்ளைகளை கரைசேர்க்கும் ஒப்பற்ற ஜீவன் தாய்.மானுடம் மட்டுமல்லாமல் ஜீவிக்கும் ஒவ்வொரு உயிரிழும் தாயின் அன்பு இழையோடுகிறது என்பதற்கு உதாரணம் தான் ஈரோட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

ஈரோடு மாவட்டம் பெரியார் நகர் சிதம்பர் காலனி பகுதியில் கால்வாய் அருகே தன்னுடைய 6 குட்டிகளையும் அடைகாத்து வந்தது அந்த தாய்.

திடீரென நேற்று பெய்த கனமழையால் கால்வாயில் நீர் பெருக்கெடுத்த ஓட, அச்சத்தின் காரணமாக குட்டிகள் கூச்சலிட தொடங்கின.


சத்தத்தை கேட்டு பதறியடித்து ஓடி வந்த தாய் நாய், தன்னுடைய 6 குட்டிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்வியபடி பாதுகாப்பான இடத்தில் கரை சேர்த்தது.இடையில் மழையில் விளையாட சேட்டை செய்த குட்டியின் காலை கவ்வி `அம்மா அடிச்சுடுவேன் வந்துடு’ என்று செல்லமாக மிரட்டும் பாணியில் குட்டியின் காலை கவ்வி தாய் இழுத்துச் சென்ற காட்சி அங்கிருந்தவர்களை சிலிர்க்க வைத்தது…

செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் பார்க்க…
⤵⤵↕↕⬇⬇⏬⏬????

Exit mobile version