மகனை நரபலி கொடுத்த தாய்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலக்காட்டை அடுத்த குளத்தூரை சேர்ந்தவர் சஹிதா. 4 மாத கர்ப்பிணியான இவர் அங்குள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதில் 3வது மகனான ஆமிலின் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சஹிதாவுக்கு தோஷம் இருப்பதாகவும், 3வது மகனை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்றும் கனவு வந்துள்ளது. இதையடுத்து அதிகாலையில் 6 வயதே ஆன 3வது மகன் ஆமிலினை குளியலறைக்குள் தூக்கிச்சென்று, கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொன்றார். சம்பவம் குறித்து காவல்துறைக்கும் அவரே தகவல் கொடுத்தார். சஹிதாவை கைது செய்த காவல்துறையினர், பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Exit mobile version