மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் : நடந்த விபரீதம் ..

நாகை மாவட்டம் திருமருகல் அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்த உமா மகேஸ்வரியின் மகள் அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மகளின் காதலுக்கு உமா மகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், தூங்கி கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த உமா மகேஸ்வரி பின்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தாயும், மகளும் உயிருக்கு, போராடும் நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version