குடிக்கு ஆசைப்பட்டு குழந்தையை கொன்ற குடிகார தாய்

நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதற்காக பெற்ற பிள்ளைகளை பூட்டி வைத்துவிட்டு சென்ற கொடூர தாய்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

நண்பர்களோட சேர்ந்து குடிப்பதற்காக தன்னுடைய 11 மாத குழந்தை மற்றும் 3 வயது மகளையும் வீட்டில் பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார் ரஷ்யாவை சேர்ந்த ஓல்கா பசரோவா எனும் அற்புத தாய். முழுவதும் குடித்து கொண்டாடிவிட்டு, 4 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து கதைவை திறந்து பார்த்துள்ளார். அப்போது 11 மாத குழந்தை பசியால் தவித்து துடி துடித்து இறந்துள்ளது. அதேபோல 3 வயது மகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

 

Exit mobile version