குடும்பத் தகராறில் மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை

திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக மகனை கொலைசெய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர், வடக்குப் பட்டியை சேர்ந்தவர் முருகன். அரசு பேருந்தில்
நடத்துனராக பணிபுரிந்துவரும் இவர், மனைவி கோமதி, மகன் சரவணன், மகள் நந்தினி ஆகியோருடன் திருச்சி, அய்யனார் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில், தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முருகன் மற்றும் அவரது மனைவி கோமதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, முருகன் இரவுப் பணிக்கு சென்ற நிலையில், மகன் சரவணனை கொலை செய்துவிட்டு, கோமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Exit mobile version